கரியவாசத்திற்கு நாராயணசாமி கண்டனம்

இந்தியாவின் வட மாநிலங்களே சிங்கள மக்களின் பூர்வீகம் என்று கூறிய இலங்கை தூதர் கரியவாசத்திற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கை தூதர் கரியவாசம், தூதரக வேலையை விட்டு தேவையில்லாத ‌பணிகளில் தலையிடக்கூடாது. சிங்களர்கள் வட இந்தியர்கள் தான் என கருத்து தெரிவித்தாலும் அதனை வெளியுறவுத்துறையிடம் தான் தெரிவிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் மேம்பாட்டிற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியே, நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தமிழக கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றுவதிலும் பிரதமருக்கு கடிதம் எழுவதிலுமே காலத்தை கடத்துகின்றன என்றும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply