2011 ல் எச்சரிக்கை விடுத்தும் தோட்ட நிர்வாகம் பொருட்படுத்தவில்லையாம் : அமைச்சர் மஹிந்த சமர சிங்க

ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதி யில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியி லுள்ள மக்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்குமாறு 2011 ம் ஆண்டே தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்த போதும் தோட்ட நிர்வாகம் இதனை பொருட்படுத்தவில்லை என அமைச்சர் மஹிந்த சமர சிங்க நேற்று தெரிவித்தார். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அந்தந்த பகுதிகளிலுள்ள மக்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்படி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

குறிப்பிட்ட ஹல்துமுல்ல பகுதியிலுள்ள லயன் குடியிருப்புகளை அப்புறப்படுத்தி வேறு பகுதிகளில் அவர்களைக் குடியமர்த்துமாறு தோட்ட நிர்வாகத்துக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 2011ல் தெரிவித்திருந்தது.

இதனை ஏன் தோட்ட நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என்பது பற்றி பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply