ஜெயலலிதாவுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சந்திப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, போயஸ் தோட்ட இல்லத்திற்குச் சென்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 16 அமைச்சர்கள் நேற்று பிற்பகல் சந்தித்தனர். சுமார் ஒருமணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் கொடுப்பதாக ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அந்த காசோலைகளை உரியவர்களிடம் வழங்க வேண்டும் என்று அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம் இந்த சந்திப்பின் போது ஜெயலலிதா கூறிதாக தெரிகிறது. மேலும் அரசுத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஜெயலலிதா ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் அமல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply