வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் : 11 பேர் உயிரிழப்பு

Wednesday, September 3rd, 2025 at 10:22 (SLT)

வெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார்.

மேலும் வாசிக்க >>>

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

Wednesday, September 3rd, 2025 at 7:38 (SLT)

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று (03) அதிகாலை லொறி ஒன்றும் பவுசர் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் : சரத் பொன்சேகா

Tuesday, September 2nd, 2025 at 10:41 (SLT)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவசர கால போர் நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தப்பிக்க அனுமதித்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தையிட்டி திஸ்ஸ விகாரை : கிஞ்சித்தும் கரிசனை கொள்ளாத ஜனாதிபதி

Tuesday, September 2nd, 2025 at 10:38 (SLT)

வடக்கில் வந்து இனவாதம் வேண்டாம் என பேசும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நிலுவையிலுள்ள வழக்குகள் டிசம்பருக்குள் தீர்க்கப்பட வேண்டும் : நீதிச் சேவைகள் ஆணைக்குழு உத்தரவு

Tuesday, September 2nd, 2025 at 10:34 (SLT)

நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்க வேண்டும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது

Tuesday, September 2nd, 2025 at 10:31 (SLT)

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

மஹிந்வை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் :பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Tuesday, September 2nd, 2025 at 10:26 (SLT)

மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றது. அவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. ரணில் கைது விடயத்தில் நடப்பு அரசாங்கம் மேற்கொண்ட முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.


ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை : வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

Tuesday, September 2nd, 2025 at 7:55 (SLT)

ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 பேர் பலி

Tuesday, September 2nd, 2025 at 7:47 (SLT)

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2) உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வௌியாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று

Tuesday, September 2nd, 2025 at 7:43 (SLT)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும். கட்சியின் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகளை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 500 பேர் உயிரிழப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் காயம்

Monday, September 1st, 2025 at 14:38 (SLT)

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

சி.ஐ.டிக்கு இன்று வர வேண்டாம் : சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு

Monday, September 1st, 2025 at 10:33 (SLT)

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில். தான் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் தானே சிக்கி ஒருவர் உயிரிழப்பு

Monday, September 1st, 2025 at 10:30 (SLT)

யாழ்ப்பாணத்தில் தான் அமைத்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜெனீவா விவகாரம் குறித்து புதனன்று இராஜதந்திரிகளை சந்திக்கும் வெளிவிவகார அமைச்சர் : விஜித ஹேரத்

Monday, September 1st, 2025 at 7:57 (SLT)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது மீளாய்வுக் கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவா செல்ல முன்னர் உள்நாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா கொழும்பில் நடைபெறவுள்ளது

Monday, September 1st, 2025 at 7:52 (SLT)

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா, எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிகழ்வுக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>