இந்திய மாணவன் கனடாவில் சுட்டுக் கொலை

Monday, December 9th, 2024 at 10:28 (SLT)

கனடாவின் எட்மண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நாவற்காடு வயல் பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ள நீர் : இந்த வருடத்துடன் தீர்வு வழங்குவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி

Monday, December 9th, 2024 at 10:24 (SLT)

யாழ். தென்மராட்சி – வரணி, நாவற்காடு வயல் வெளிப் பகுதியில், வெள்ள நீர் தேங்கி நிற்பதை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்த வருடத்துடன் தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்ததுடன் விவாசாயிகளுடன் கலந்துரையாடினார். யாழ்.தென்மராட்சி வரணி நாவற்காடு வயல் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்பதால் நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடையும் அபாயத்தில் இருப்பதாகவும் தொண்டைமனாறு தடுப்பணையின் வான் கதவுகளை திறந்து விடுமாறு கோரி அப்பகுதி விவசாயிகள் கடந்த 5ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

பிரான்ஸ் ‘நோட்ர டேம்’ தேவாலயம் : 5 ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடுகளுக்காக திறப்பு

Sunday, December 8th, 2024 at 11:14 (SLT)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு நோட்ரே டேம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.

மேலும் வாசிக்க >>>

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sunday, December 8th, 2024 at 11:10 (SLT)

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அது பிற்போடப்பட்டதாக அதன் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் 300 பவுண் நகை கொள்ளையிட்டு கொழும்பில் தலைமறைவு 

Sunday, December 8th, 2024 at 11:05 (SLT)

யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் சந்தேகநபரிடமிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Sunday, December 8th, 2024 at 11:01 (SLT)

நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஸ்பொபெல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 53 வயதுடைய போகஸ்பொபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் தொடர் கரிசனையுடன் செயலாற்றிவருகிறோம் : பிரிட்டன் அரசு

Sunday, December 8th, 2024 at 10:56 (SLT)

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் வாசிக்க >>>

இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப் பாடுபட்டவர் அமரபுர பீடத்தின் 16ஆவது மகாநாயக்க தேரர் : சர்வதேச பௌத்தர்கள் வலையமைப்பின் தலைவர் ஹர்ஷ குமார நவரத்ன

Sunday, December 8th, 2024 at 10:50 (SLT)

அமரபுர பீடத்தின் 16ஆவது மகாநாயக்க தேரராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மிகக்கடினமாகப் பாடுபட்டதாக சர்வதேச பௌத்தர்கள் வலையமைப்பின் தலைவர் ஹர்ஷ குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது : சிரிய இராணுவம்

Sunday, December 8th, 2024 at 10:46 (SLT)

கிளர்ச்சிக்காரர்கள் அதிரடி தாக்குதலை மேற்கொண்டுசிரிய தலைநகரை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. சிரிய இராணுவ அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரின் சமதர்ம கொள்கையை பாராட்டி உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வாழ்த்து

Sunday, December 8th, 2024 at 10:40 (SLT)

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரராக தெரிவாகியிருக்கும் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரின் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், இவ்வாறானதொரு நிகழ்வில் முதன்முறையாக ஒரு தமிழரைப் பேச அழைத்தமையினையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

15 ஆம் திகதி டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர : திங்கட்கிழமை பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு

Sunday, December 8th, 2024 at 10:34 (SLT)

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

சிரிய தலைநகர் டமஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் வசம்

Sunday, December 8th, 2024 at 10:30 (SLT)

சிரிய தலைநகர் டமஸ்கஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரிய ஜனாதிபதி நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் சிரிய இராணுவம் தலைநகரிலிருந்து பின்வாங்கியுள்ளது.இந்த நிலையில் தலைநகர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கத்தை வலியுறுத்தும் சுமந்திரன்

Sunday, December 8th, 2024 at 10:25 (SLT)

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவடைந்த பின், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

Sunday, December 8th, 2024 at 10:20 (SLT)

206,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்

Saturday, December 7th, 2024 at 17:02 (SLT)

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

மேலும் வாசிக்க >>>