யாழ். தென்மராட்சி – வரணி, நாவற்காடு வயல் வெளிப் பகுதியில், வெள்ள நீர் தேங்கி நிற்பதை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்த வருடத்துடன் தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்ததுடன் விவாசாயிகளுடன் கலந்துரையாடினார். யாழ்.தென்மராட்சி வரணி நாவற்காடு வயல் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்பதால் நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடையும் அபாயத்தில் இருப்பதாகவும் தொண்டைமனாறு தடுப்பணையின் வான் கதவுகளை திறந்து விடுமாறு கோரி அப்பகுதி விவசாயிகள் கடந்த 5ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் வாசிக்க >>>